Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

டிசம்பர் 08, 2020 05:40

சென்னை: சென்னை - சேலம் 8 வழிசாலை திட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என்பது உறுதியாகி உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்